×

கோயில் விழாக்களில் கூட்ட நெரிசல் தடுக்க நடவடிக்கை: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் பகுதியில் உள்ள கருப்பசாமி கோயில் திருவிழா நெரிசலில் சிக்கி துரதிருஷ்டவசமாக 7 பேர் உயிரிழந்தது பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இனிமேல் இதுபோன்ற எதிர்பாராத கூட்ட நெரிசல் நடைபெறாமல் இருக்கவும் பக்தர்களுக்கான சுவாமி தரிசனம் நல்லமுறையில் நடைபெறவும், கோயிலுக்கு வருபவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கையை தொடர்ந்து எடுக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple festivals ,government ,GK Vasan , GK Vasan ,government
× RELATED ஒன்றிய அரசு சட்டத்தை வழிபாடாக...