×

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது: பக்தர்கள் அச்சம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கோடை விடுமுறையையொட்டி நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று காலையிலேயே கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது காலை 6 மணி யளவில் திடீரென்று கடல் உள்வாங்கியது. இதனால் கடலில் குளித்துக் கொண்டிருந்த பக்தர்கள் அச்சத்துடன் வெளியேறினர். ஆனால் இளைஞர்கள் மட்டும் பயமின்றி செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுமார் இரண்டரை மணி நேரம் உள்வாங்கிய கடல் அதன் பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sea ,Tiruchendur ,devotees , Thiruchendur, sea, inward, devotees, fear
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...