கேரளாவில், திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் சசிதரூர் எம்பி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்று இவர் எழுதிய புத்தகத்தின்அட்டை படம் இடம் பெற்றது. இது தேர்தல் நடைமுறை சட்டத்திற்கு எதிரானது என்று தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார் அளித்தது. இதையடுத்து, சசிதரூர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி