×

மணப்பாக்கத்தில் பரிதாபம் டிப்பர் லாரி மோதி 3 பேர் பலி: டிரைவருக்கு வலை

ஆலந்தூர்: சென்னை மணப்பாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மூர்த்தி (32), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவகுமார் (29), முரளி (29) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவர்கள் 3 பேரும் சொந்த ஊர் செல்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் மணப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் அமர்ந்து பஸ்சுக்கு காத்திருந்தனர். அப்போது கிண்டியில் இருந்து போரூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் அமர்ந்திருந்த 3 பேர் மீது வேகமாக மோதியது.

இதில் மூர்த்தி, சிவகுமார், முரளி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர். இதை பார்த்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பலியான 3 பேரின் சடலங்களை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dipper truck, accident
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்