×

திருச்சி துறையூர் அருகே கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

திருச்சி: திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே முத்தையம்பாளையம் கருப்பணசாமி கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு சித்ரா பவுர்ணமியையொட்டி, படிகாசு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதற்காக திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு ஒன்று கூடுவர். இந்தக் காசை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.

கோவில் திருவிழாவில் கருப்பசாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.  இதன்பின் பக்தர்களுக்கு படிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  பிடிக்காசினை கோவில் பூசாரி பக்தர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த போது, அதை வாங்குவதற்கு கூட்டம் முண்டியடித்தது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் ஒருவரை ஒருவர் தள்ளியதில் கீழே விழுந்து பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 4 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 7 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.  10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple ,Trichy Duraiyur , Tiruchi, temple festival, crowd crowd, 7 people, kills
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...