மும்பை: ஜெட் ஏர்வேசுக்கு உதவுவதற்காக அதன் விமானங்களை இயக்க ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமானங்களை இயக்க முடியாத நிலையில் உள்ளது. சம்பள பாக்கி காரணமாக ஊழியர்களும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெட் ஏர்வேசின் போயிங் 737 மற்றும் 777 விமானங்களை குத்தகை முறையில் இயக்க ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
ஜெட் ஏர்வேசின் 30 முதல் 40 போயிங் விமானங்களை ஸ்பைஸ் ஜெட்டும், 5 விமானங்களை ஏர் இந்தியாவும் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கும் வேலை கிடைக்கும். அடுத்த பத்து நாட்களில் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் செயல்பாட்டிற்கு வரும் என்றும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களின் பிரச்சனை தீரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி