×

நீடாமங்கலம் அருகே கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த மக்கள் மீது தடியடி நடத்திய இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்: ராஜஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடையவர்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே மக்கள் மீது தடியடி நடத்திய இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழங்களத்தூர் கிராமத்தில் உள்ள 25வது வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் அமைதியான முறையில் வாக்குப்பதிவு தொடங்கியது. அருகில் உள்ள டீ கடையில் பொதுமக்கள் டீ குடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் போலீசாருடன் வந்தார். ஏன் இங்கு கூட்டமாக உட்கார்ந்திருக்கிறீர்கள் எனக்கேட்டு தடியடி நடத்தி விரட்டினார்.

இதில் ஆச்சியம்மாள் (60), சரவணகுமார் (45), விவேகானந்தன் மகன் விஷ்வா(12), அழகர்சாமி (50), செல்லதுரை(45) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து மதசார்பற்ற கூட்டணி கட்சியினர் ஒளிமதியில் சாலை மறியல் செய்தனர். இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தடியடி நடத்திய இன்ஸ்பெக்டர் முனிசேகரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்பி துரை உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் முனிசேகர் ராஜஸ்தானில், சென்னை இன்ஸ்பெக்டர் பெரியசாமி துப்பாக்கியால் சுட்டு கொன்ற விவகாரத்தில் தொடர்புடையவர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Inspector Action ,Store ,Rajesh Gunman ,Neidamangalam , Drinking, tea, drinking, people, bathe, inspector change
× RELATED அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக்...