×

மேடையில் பேசியபோது ஹர்டிக் படேல் கன்னத்தில் அறை : குஜராத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பரபரப்பு

அகமதாபாத் : குஜராத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மேடையில் ஏறி ஹர்டிக் படேல் கன்னத்தில் அறைந்த நபரை மற்றவர்கள் சுற்றி வளைத்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத்தில் பட்டிடர் சமூகத்தை சேர்ந்தோருக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி தந்தவர் ஹர்திக் படேல். சமீபத்தில்   
காங்கிரஸ் கட்சயில் இணைந்து ஹர்திக் படேல் அக்கட்சிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சுரேந்தர்நகர் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒருவரான ஹர்திக் படேல் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேடை மீது ஏறிய நபர், சற்றும் எதிர்பாராத வகையில் ஹர்திக் படேலின் இடது கன்னத்தில் ஓங்கி பளார் பளார் என அறைந்து கோபமாக திட்டினார். திடீரென நடந்த இந்த தாக்குதலால் அதிர்ச்சி அடைந்தவர்கள் ஹர்திக் கன்னத்தில் அறைந்தவரை சுற்றி வளைத்து தாக்கினர். அடுத்தடுத்த தாக்குதல்களால் பொதுக் கூட்டம் நடந்த இடத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. ஹர்திக் படேல் கன்னத்தில் அறைந்தவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hartik Patel ,election campaign meeting ,Gujarat , Gujarat, Election, Hurdik Patel, Congress, Police
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...