×

அரியலூர் பொன்பரப்பியில் குடியிருப்பில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரம்: 25 பேர் மீது வழக்குப்பதிவு!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 20 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொன்பரப்பியில் வாக்குப்பதிவு மையத்தின் அருகே ஜெயங்கொண்டம் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின்  தேர்தல் சின்னமான பானையை பாமகவை சேர்ந்த சிலர் உடைத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அவ்வழியாக வந்த பாமகவை சேர்ந்த சுப்ரமணியன் உள்பட 4 பேர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தினர். இதில் சுப்ரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாமக தரப்பு அருகே உள்ள காலனி தெருவில் புகுந்து 20க்கும் மேற்பட்ட  வீடுகளின் ஓடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 3 பேரை அடித்து மண்டையை உடைத்துள்ளனர்.

அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொன்பரப்பியில் சிலரது இரு சக்கரவாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு, அந்த தாக்குதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த தாக்குதல் தீவிரமடையாமல் இருக்க 150கும் மேற்பட்ட போலீசார் 13 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலின் காரணமாக 25க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, தாக்குதல் நடந்த சமயத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தி தொடர்பாளரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தொடர்ந்த வழக்கு காரணமாவும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ariyalur ,incident , Ariyalur, ponparappi, conflict, houses, damage, charge
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...