×

வாக்களிக்க துபாயில் இருந்து சென்னைக்கு பறந்து வந்த தம்பதி

சென்னை: சென்னை, நங்கநல்லூர் 2வது பிரதான சாலையில் வசிப்பவர் விஜய்.  இவரது மனைவி பிரீத்தா. இவர்கள் துபாய் ஜபல்லா அலி பகுதியில்  வசித்து வருகிறார்கள். மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக கணவன், மனைவி இருவரும் சென்னைக்கு வந்தனர். இதில், விஜய் கே.கே.நகர் வாக்கு சாவடியிலும், பிரீத்தா நங்கநல்லூரில் உள்ள வாக்குசாவடியிலும் வாக்களித்தனர். வாக்களிப்பது  ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை என்பதால் துபாயில் இருந்து பறந்து வந்து வாக்களித்ததாக பிரீத்தா பெருமையுடன் கூறினார். வாக்களிக்க எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், ஜனநாயக கடமையை ஆற்ற வந்த இந்த துபாய் தம்பதியினரை அப்பகுதிகளை சேர்ந்தவர்கள் பாராட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dubai ,Chennai , To vote, Dubai, Chennai, flew, came, couple
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...