வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் நாகை நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு 217 வாக்கு சாவடிகளிலும் தொடங்கியது. ஜவுளி துறை அமைச்சர் தலைஞாயிறு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண்.26 வாக்கு சாவடியில் காலை 7 மணிக்கு தனது வாக்கை முதலில் அளிக்க சென்றார். வாக்களிக்க பூத்சிலிப்பை காண்பித்து விரலில் மைவைத்து மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்க முயன்றார். ஆனால் வாக்கு இயந்திரம் இயங்கவில்லை. இயந்திரத்தை இயக்க வேண்டிய அதிகாரி தவறுதலாக பட்டனை அழுத்தியதால் மின்னணு இயந்திரம் இயங்கவில்லை. பின்னர் மின்னணு இயந்திரத்தை சரி செய்தனர். அதனைத் தொடர்ந்து வாக்கு சாவடியில் 25 நிமிடம் காத்திருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்களித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி