×

பிரதமர் கூட்ட மேடை அருகே போலீசின் துப்பாக்கி வெடித்தது: திருவனந்தபுரத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடை அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசின்  துப்பாக்கி தவறுதலாக வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் மோடி திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் மற்றும் ஆற்றிங்கல் தொகுதி வேட்பாளர் ஷோபா  சுரேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய நேற்று இரவு 8.30 மணியளவில் திருவனந்தபுரம் வந்தார். இதை ஒட்டி  திருவனந்தபுரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மோடி பேசுவதற்காக சென்ட்ரல் ஸ்டேடியத்தில் மேடை  அமைக்கப்பட்டிருந்தது.

மேடைக்கு அருகிலும் ஸ்டேடியம் பகுதியிலும் பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  ஸ்டேடியத்தை ஒட்டித்தான் கேரள அரசு தலைமை செயலகம் உள்ளது. இரவு 7 மணியளவில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கி திடீரென வெடித்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில்  துப்பாக்கி தவறுதலாக வெடித்தது தெரியவந்தது. இதையடுத்து கொல்லம் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீஸ்காரர் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த டிஜிபி லோக்நாத் பெக்ரா உத்தரவிட்டுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police gun fire ,crowd stage ,Trivandrum , Police, gun fire broke, Prime Minister's crowd stage, Trivandrum
× RELATED 10 நிமிடம் முன்னதாகவே புறப்படும்...