×

ஆற்காடு அருகே பரபரப்பு கல்குவாரியில் தங்கச்சுரங்கம்?: ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை

ஆற்காடு: ஆற்காடு அருகே கல்குவாரியில் தங்கச்சுரங்கம் இருப்பதாகவும் அதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மக்கள் தாசிதாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே ஆனைமல்லூர்- நம்பரை கிராம எல்லை அருகே  3 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மாலை அவ்வழியாக பொதுமக்கள் நடைபயிற்சிக்கு சென்றனர். அப்போது, கல்குவாரி அருகே சாலையோரத்தில் தங்கம் போல் ஒரு கல் பிரகாசித்தது. இதனால், சந்தேகமடைந்த அவர்கள், அந்த கல்லை எடுத்துக்கொண்டு நேற்று ஆற்காடு தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். தாசில்தார்  வத்சலாவிடம் கல்லை ஒப்படைத்து மனு அளித்தனர். அதில், ‘கல்லின் மீது படர்ந்திருப்பது தங்க துகள்கள்தான். எனவே, இதுகுறித்து உரிய ஆய்வு செய்யவேண்டும்’ என தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Arcot ,Calcutta ,inspection , Arcot, Goldgallery ,Calgary, Public Request ,Inspection
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...