×

வரும் 5 ஆண்டுகளுக்கு இந்தோனேசியாவை ஆளபோகும் ஜனாதிபதி யார்? பரபரப்பான வாக்குப்பதிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று மிகப்பெரிய பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. முதல் முறையாக, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகிறது. உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடு இந்தோனேசியா ஆகும். இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். தற்போது நடக்கும் தேர்தலில் சுமார் 2.45 லட்சம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த தேர்தல் வரும் 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி மற்றும் எம்பிக்களை 19 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். மொத்தம் 8 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. ஜனாதிபதிக்காக தற்போதைய ஜனாதிபதியும், இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி தலைவர் ஜோகோ விடோடோவும், முன்னாள் ராணுவ தளபதியும் கெரிந்த்ரா கட்சி தலைவருமான பிரபோவோ சுபியாண்டோவும்போட்டியிடுகின்றனர்.  கருத்துக்கணிப்பு முடிவுகள் விடோடோவுக்கு சாதகமாகவே உள்ளன.

கடந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தவற விட்ட சுபியாண்டோ, இந்த முறை தேர்தல் களத்தில் விடோடோவுக்கு கடும் சவாலாக விளங்கினார். இந்த முறை வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சுபியாண்டோ குற்றம்சாட்டினார். ஒருவேளை தான் தோல்வி அடைந்தால், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்துள்ளார். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : President ,Indonesia , president ,Indonesia
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்