×

சிட்டிங் எம்பியா மன்னர் பேரனா...உதம்பூரில் நாளை இறுதிச்சுற்று

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள உதம்பூர் மக்களவை தொகுதியில் 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் வாக்குரிமை 16.85 லட்சம் வாக்காளர்களிடம் உள்ளது. இந்த  தொகுதியின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், கிஷ்த்வார், தோடா, ராம்பன், ரியாசி, உதம்பூர், காத்வா ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 17 சட்டப்பேரவை தொகுதிகளில் பரவி உள்ளதாக அமைந்துள்ளது. இந்த தொகுதியில்  மொத்தம் 2,710 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.  பா.ஜ.வின் தற்போதைய எம்பி ஜிதேந்திர சிங், காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்யா சிங் (மகாராஜா ஹரிசிங்கின் பேரன்) உள்பட 12 பேர் களத்தில்  உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா, நகர், அனந்தநாக், லடாக், உதம்பூர், ஜம்மு ஆகிய 6 மக்களவை தொகுதிகள் உள்ளன. தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், 5 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல்  ஆணையம் முடிவு செய்தது. இதன்படி, ஏப்ரல் 11, 18, 23, 29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளது. பாரமுல்லா தொகுதியில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 2வது கட்ட தேர்தலில்  உதம்பூரில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samping Empia ,Udaipur , Sitting Empia, King Mr, Tomorrow , Udhampur,
× RELATED இந்தியாவின் உதய்பூர் நகரில் பழங்கால கார்கள் காட்சிக்கு வைப்பு!!