×

23ம் தேதிக்கு பிறகு மாஜி ஆவார் மோடி...அகமது படேல் பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் அகமது படேல். குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். சோனியாவின் செயலாளராக பணியாற்றிவர். இவர், குஜராத்தில் உள்ள  வதோதராவில் நேற்று நடந்த  நிகழ்ச்சியில் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜ அரசு தனது கொள்கைகளால் மக்களை துன்புறுத்தி வந்துள்ளது. இதனால், அந்த கட்சிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பொதுமக்கள் வாக்களித்து வருகிறார்கள்.    குஜராத்தில் தற்போது காங்கிரசுக்கு மக்களவை எம்பி.க்கள் யாரும் இல்லாத நிலையில், தேர்தலுக்கு பின் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 12 முதல் 15 தொகுதிகளை கைப்பற்றும். இந்தமுறை மக்கள் தவறான வழிகாட்டுதலுக்கு  மயங்க மாட்டார்கள்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் மே 23ம் தேதி நரேந்திர மோடி முன்னாள் பிரதமராகி இருப்பார். மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தலைவர்கள் ஒன்று சேர்ந்து பிரதமர்  யார் என்பதை தேர்வு ெசய்வார்கள். தீவிரவாதத்திற்கு எதிராக போராடி காங்கிரஸ் தலைவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். எனவே, தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவது எப்படி என எங்களுக்கு பாஜ பாடம் நடத்த  தேவையில்லை. பாஜ தீவிரவாதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Ahmed Patel , Modi, Ahmed Patel, speech
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...