×

மேற்கு வங்கம், திரிபுரா தேர்தல் முறைகேடுபுகார் அளிக்க மார்க்சிஸ்ட் முடிவு

புதுடெல்லி: மக்களவை முதல்கட்ட தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். மக்களவை முதல்கட்ட தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், `‘முதல்கட்ட தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ள முறைகேடுகள் பெரும் சந்தேகங்களுக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க இருக்கிறோம்’’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : West Bengal ,Tripura ,elections , West Bengal, Tripura, Election, Abuse, Complaint, Marxist
× RELATED மேற்குவங்க மாநில டிஜிபியை இடமாற்றம்...