×

8 வழிச்சாலை திட்டம் பற்றிய நிதின் கட்கரி பேச்சுக்கு பாமக எதிர்ப்பு: 2 நாள் கழித்து அன்புமணி அறிக்கை

சென்னை:  பாமகஇளைஞரணி தலைவர் அன்புமணி  நேற்று வெளியிட்ட அறிக்கை: சேலத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, மக்களிடம் ஆலோசனை நடத்தி அவர்களின் ஒப்புதலைப்பெற்று  சென்னை-  சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார். மக்கள் நலனுக்கு எதிரான இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் பாமகவிற்கு உடன்பாடில்லை.

தமிழக மக்களிடையே அத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருவதை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவர் கூறிவிட்டார் என்பதாலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடாது. 8 வழிச்சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி அது தேவையில்லை என்பதை நிதின் கட்கரிக்கு புரிய வைப்போம். எனவே, உழவர்கள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Advani Gadkari ,8th Scheme ,DMRC , 8 pavilion project, Nitin Gadkari, PM, opposition, report
× RELATED அனுமதிக்கப்பட்ட அளவில் தான்...