×

முத்தரசன் புகார் போலீஸ் உதவியுடன் ஆளுங்கட்சி பண பட்டுவாடா

திருவாரூர்: திருவாரூரில் கட்சி அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி:
ஆளுங்கட்சியினர் காவல்துறையின் துணையோடு பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். சாதாரண வியாபாரிகளை மறித்து பணத்தை பறிக்கின்ற தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரின் பணப்பட்டுவாடா பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தேர்தல் என்பது 2 கட்சிகளுக்கிடையேயான  தேர்தல் அல்ல.

நாட்டையும் அரசியல் சட்டத்தையும் மதசார்பின்மையையும் காப்பாற்றுவதற்கான தேர்தல். சேலம் 8 வழிச்சாலைக்கு நீதி மன்றம் தடைவிதித்துள்ளது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியோ முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவோடு மீண்டும் 8 வழிச்சாலை அமைப்போம் என்று பேசுகிறார். எனவே  மதவாத கும்பலுக்கு முடிவுகட்டுவதுடன் மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றாட்சி அமைய அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mutharasan ,governor , Muthurasan, Complaint, Police, Assistance, Governance
× RELATED இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு;...