×

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் - சி.ஆர்.பி.எப். வீரர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ராஞ்சி: மாவோயிஸ்டுகள் உடனான துப்பாக்கிச் சண்டையில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம், 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்திற்குட்பட்ட பெல்பா காட் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்டுகளை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெல்பா காட் மலைப்பகுதியில் நக்ஸல்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி நடவடிக்கையை சிஆர்பிஎப் வீரர்கள் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று காலை இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சிறிது நேரம் தொடர்ந்த இந்த துப்பாக்கி சண்டையில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஏ.கே. 47 துப்பாக்கி, 4 பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoists ,Gunfight ,soldiers ,Jharkhand ,CRPF , Maoists, CRPF. Player, firing squad
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்