×

தெலங்கானாவில் ஓட்டு பதிவு இயந்திரங்களை போட்டோ எடுத்தவர் கைது

ஐதராபாத்: தேர்தல் இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை போட்டோ, வீடியோ எடுத்த தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் ஏஜென்ட் கைது செய்யப்பட்டார். மக்களவைக்கான முதல் கட்டத் தேர்தலில் தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் கடந்த 11ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், மல்கஜ்கிரி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டு சரிபார்க்கும் இயந்திரம் ஆகியவை போகராம் பகுதியில் உள்ள கல்லூரியில் பாதுகாப்பாக வைக்க எடுத்து செல்லப்பட்டது.

அப்போது அந்த இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட அறையை விதியை மீறி வாக்குச்சாவடி ஏஜென்ட் வெங்கடேஷ் போட்டோ, வீடியோ எடுத்தார். இவர் மல்கஜ்கிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி வேட்பாளர் ராஜசேகர ரெட்டியின் தரப்பில் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி ஏஜென்ட் ஆவார். இதுகுறித்து செகந்திரபாத் கன்டோன்மெண்ட் பகுதி தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Photographer ,Telangana , Telangana, Vote, Machines, Photograph, Arrested
× RELATED கார்கள் மோதல்: 3 பேர் பலி