×

மோடிக்கு ஆதரவாக பிரசாரம் பாஜ தொண்டர் அடித்து கொலை: தனியார் பஸ் டிரைவர் கைது

ஒரத்தநாடு:  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). பாஜ தொண்டர். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு அண்ணா சிலை அருகே உள்ள டீக்கடை முன்பு பிரதமர் மோடி படம் பொறித்த பேட்ஜை தனது சட்டையில் அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்தவர்களிடம், ‘‘பிரதமர் மோடி மிகவும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். அடுத்த முறையும் அவர்தான் பிரதமராக வருவார்’’ என்று என்று பேசி கொண்டிருந்தார். அப்போது, ஒரத்தநாடு அடுத்த கண்ணந்தங்குடியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் கோபிநாத் (22) என்பவர் அங்கு வந்தார். கோவிந்தராஜின் பேசுவதை கேட்டு கொண்டிருந்த அவர், ‘‘என்ன பிரதமர் மோடி உனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார், மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறாயா’’ என்று கூறி கோவிந்தராஜிடம் தகராறு செய்தார்.

அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மதுபோதையில் இருந்த கோபிநாத் ஆத்திரமடைந்து கோவிந்தராஜை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில், கோவிந்தராஜ் காயமடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் விலக்கிவிட்டனர். இவர்களில் கோபிநாத் சென்றுவிட்டார். காயமடைந்த கோவிந்தராஜ், சிகிச்சை பெறுவதற்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சென்றார்.  அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு இரவு வீட்டுக்கு சென்றார். அப்போது நடந்த சம்பவம் குறித்து தனது மகளிடம் கூறினார். பின்னர், அவரது அறைக்கு சென்று கோவிந்தராஜ் தூங்கினார். சிறிதுநேரம் கழித்து அவரை எழுப்புவதற்காக மகள் சென்றார். அப்போது கோவிந்தராஜ் இறந்து கிடந்தார். இதுகுறித்து, ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிந்து கோபிநாத்தை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajan ,volunteer assassination ,bus driver , Modi, campaign, Bhajan volunteer, murdered, bus driver, arrested
× RELATED திமுக அளித்த புகாரில் ஒன்றிய...