×

கூட்டு பலாத்காரம் செய்ததால் தீக்குளித்த மாணவி சாவு....4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

கூத்தாநல்லூர்: கூத்தநால்லூர் அருகே 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததால் தீக்குளித்த 10ம் வகுப்பு மாணவி நேற்று உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய மகள் 10ம் வகுப்பு தேர்வை எழுதி முடித்து வீட்டில் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்தனர். அப்போது, மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

 இதை அறிந்த அதே பகுதியைச்  சேர்ந்த தாஸ், விஜய், அஜித், முருகேஷ் ஆகிய 4 பேரும்  மது போதையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். மாணவி பயந்து கூச்சல் போட்டுள்ளார். உடனே, மாணவியை தாக்கி கூட்டு பலாத்காரம்  செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். தனது பெற்றோர் வந்ததும், நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர், அவர்கள் கண்முன்னே தனது உடலில் மண்ணெண்ெணயை  ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடனடியாக அவரை திருவாரூர் அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ேநற்று உயிரிழந்தார். இதுகுறித்து, கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 வாலிபர்களை தேடி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gang ,gangster gangster gang rape , Because , gang-rape,,gang , 4 people
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை