×

மொபட் உரசியதால் ஆத்திரம் கல்லூரி மாணவிக்கு முகத்தில் குத்து...பெண் காவலர் அடாவடி

தாம்பரம்: தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கல்லூரி மாணவி. இவர், நேற்று முன்தினம் இரவு மேற்கு தாம்பரம் பகுதியில் புத்தகம் வாங்குவதற்காக உறவினருடன்  மொபட்டில்  சென்றுள்ளார். மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் மார்க்கெட் பகுதியில் சென்றபோது, கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் அவரது வாகனம் ஊர்ந்தபடி சென்றுள்ளது. அப்போது தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்  கலைசுபா அவ்வழியாக நடந்து சென்றுள்ளார். அவர் மீது ஜாஸ்மினின் மொபட் லேசாக உரசியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலர், ஜாஸ்மினை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதற்கு ஜாஸ்மின் கூட்ட நெரிசலில் தவறுதலாக உரசிவிட்டது என கூறி   மன்னிப்பு கேட்டுள்ளார். அதை ஏற்காத பெண் காவலர் கண்ணிமைக்கும் நேரத்தில் கல்லூரி மாணவியின் முகத்தில் வேகமாக குத்தியுள்ளார். இதில் மாணவி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் பெண் காவலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்குள் காவல் நிலையத்தில் இருந்து காவலர்களை வரவழைத்த பெண் காவலர் பொதுமக்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஒரு கட்டத்தில் பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாததால் பெண் காவலர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனாலும் அங்கு வந்திருந்த காவலர்கள் கல்லூரி மாணவியை தனியாக அழைத்து சென்று  எந்த பிரச்னையும் செய்யாமல் போய்விடுங்கள். இல்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி உள்ளனர்.இதனால் அச்சமடைந்த மாணவி, எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் அங்கிருந்து சென்றுள்ளார். தவறுதலாக வாகனம் உரசியத்திற்கு மாணவியை கொடூரமாக தாக்கிய பெண் காவலர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mobt ,college student , Mobt's , rage,kicked, face, woman ,adawati
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது