×

தென் சென்னையில் புதிய திட்டங்கள் மூலம் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தொகுதியாக மாற்றுவேன்.....அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா உறுதி

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, நேற்று கிண்டி, மடுவன்கரை, ரேஸ் கோர்ஸ் ஏரியா, சைதாப்பேட்டை, சின்னமலை, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரிசு  பெட்டகம் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி சரவணன், பொருளாளர் சண்முகர், துணை செயலாளர் சாமி, பகுதி செயலாளர் கோட்டூர்புரம் கந்தன்,  வட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் சென்றனர்.
பிரசாரத்தின்போது இசக்கி சுப்பையா பேசியதாவது:தென்சென்னையில் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர், இளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புகளை பெற உதவி செய்வேன்.  

ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தர நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வு மேம்படுத்துவதற்கு உங்களோடு  இருந்து பணியாற்றுவேன். மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். புதிய குடிநீர் திட்டங்களை கொண்டு வந்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தொகுதியாக தென்சென்னையை  மாற்றி காட்டுவேன். ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் நல்லது செய்து காட்டுவேன். பரிசு பெட்டகம் சின்னத்துக்கு மறக்காமல் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். மக்களோடு மக்களாக இருந்து அனைத்து தேவைகளையும்  நிறைவேற்றுவேன்.இவ்வாறு கூறினார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,candidate ,EMI , New plans,South Chennai,amended, candidate
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்