கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் டேக்வாண்டா போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி வென்று அசத்தியுள்ளனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் முதலாவது ஆசிய-பசிபிக் டேக்வாண்டோ போட்டி (யு-18) கடந்த மாத இறுதியில் நடைப்பெற்றது. இதில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 2000 பேர் பங்கேற்றர். இந்தியா சார்பில் பங்கேற்ற 55 பேர்களில் 9 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
அபாரமாக செயல்பட்ட இந்திய அணி 9 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதில் தமிழக வீரர்கள் 6 தங்கம், 2 வெண்கலம் வென்றனர். தமிழகத்தைச் சேர்ந்த தீக்ஷிதா, தனுஷ் நாராயணன் தலா 2 தங்கம், அருண், பொற்செழியன் தலா ஒரு தங்கம் வென்றனர். ஆகாஷ், பிரஜன் தலா ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி