பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் பிரதமர் நரேந்திர மோடி அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி விரைவாக காரில் ஏறி சென்று விட்டார். பிரதமர் மோடி பேச்சு முடிந்த பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் பரபரப்புடன் ஒரு பெட்டியை தூக்கிக்கொண்டு மிகவும் வேகமாக சென்று காரில் ஏற்றிய காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியது. பிரதமர் மோடி அந்த பெட்டியில் என்ன வைத்திருந்தார்? என்பதை அறிந்து கொள்வதற்கு பலரும் முயன்றனர்.
அதில் ஒருவேளை பணம் எடுத்து வந்தாரா என்ற சந்தேகத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கேள்வி எழுப்பி வீடியோவை பகிர்ந்திருந்தார். ஏனென்றால், பாதுகாவலர்கள் அனைவரும் அப்பெட்டியை ஒருவித பதற்றத்துடன் வேகமாக எடுத்து சென்றனர். இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி பயண விபரங்கள் அடங்கிய லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளிட்டவை அதில் இருக்கிறது’’ என்றனர். ஆனால், 2 பேர் தூக்கி கொண்டு ஓடும் அளவிற்கு லேப்டாப் கனமான பொருளா? என கேள்வி எழுந்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி