×

ரபேல் ஊழல் நிரூபணமானால் தண்டனை நிச்சயம்: சேம்சைட் கோல் போட்ட பிரேமலதா

அவனியாபுரம்: ரபேல் விமான ஊழல் குறித்து மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டு, நிரூபணமானால் தண்டனை நிச்சயம் என பிரேமலதா பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரபேல் விமான ஊழல் குறித்து மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபணமானால் தண்டனை நிச்சயம். ஆனால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து எதுவும் சொல்ல முடியாது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்வாரா என்பது குறித்து 2 அல்லது 3 நாட்களில் தெரிவிக்கப்படும்.

வருமான வரித்துறை ரெய்டு என்பது அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும். தமிழக தேர்தல் நிலவரம் நன்றாக உள்ளது. 40 தொகுதிகளிலும்  பிரசாரம் செய்கிறேன். பிரதமர் மோடியுடன் பிரசாரத்தில் பங்கேற்கிறேன். மத்திய அமைச்சரவையில் பங்கு பெற வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து இப்போது கூற முடியாது. 40 எம்பிக்களும் டெல்லி செல்ல வேண்டும். அதன் பிறகு அமைச்சரவையில் சேர்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rafael ,scandal , Rafael Scandal, Punishment, Samside Cole, Premalatha
× RELATED ரஃபேல் விமானம் முதல் தேர்தல்...