×

லண்டனில் பேருந்தில் சென்ற பெண் எம்.பி-யிடம் சில்மிஷம்: மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு

லண்டன்: லண்டனில் பேருந்தில் சென்ற நாடாளுமன்ற பெண் உறுப்பினரை பார்த்து ரசித்தபடி ஆபாச செயல் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் எம்பியும், தொழிலாளர் கட்சித் தலைவருமான நாஸ் ஷா ஏப்ரல் 1-ம் தேதி பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அவரைப் பார்த்து ரசித்தபடி மர்மநபர் ஒருவன் ஆபாச செயல் செய்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாஸ் ஷா எம்.பி. உடனடியாக ஓட்டுநரிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்குள்ளாக அவன் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்று விட்டான். இதுகுறித்து மத்திய லண்டனில் உள்ள ஒயிட் ஹால் போலீசில் நாஸ் ஷா புகார் அளித்துள்ளார். இதனையடுத்து  ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lady ,bus lady ,London , London, Female MP, Silimsham, Police Web
× RELATED சீர்காழியில் ஆண்டு பெருவிழாவையொட்டி...