சென்னை: கொலை மிரட்டலால் தேர்தல் பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது திட்டமிட்டு சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், உயிருக்கு ஆபத்து இருப்பதாக பலமுறை புகாரளித்தும் பாதுகாப்பு வழங்கவில்லை, திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்க முயல்கின்றனர் என்று கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி