சண்டிகர் : ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு தினத்தையொட்டி பிரிட்டன் தூதரக அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், சிறுவர்கள் என 379 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 10 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டிஷ் அரசின் மதிப்பீட்டின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர்.
ஆனால், தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மகாத்மா காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி, ஆயிரம் பேர் கொல்லப்பட்டது உறுதியானது.
நூற்றாண்டு நினைவு தினம்
இதையடுத்து ஜாலியன் வாலாபாக் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, இங்கிலாந்து அரசு வருத்தம் தெரிவித்தது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, அரசு சார்பில் ஜாலியன் படுகொலைக்கு ஆழ்ந்த வருத்தத்தை பிரதமர் தெரசா மே தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம், பிரிட்டிஷ் - இந்தியா வரலாற்றில் அழியா வடு, என வருத்தம் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி