பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து துறையிலும் ஊழல் பெருகியுள்ளது, ஆனால், அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல், ஐஜி இடமாற்றத்தில் மட்டும் முதல்வர் அம்ரீந்தர் சிங் கவனம் செலுத்துகிறார் என சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங்பாதல் கூறினார். தன்னுடைய கட்சி தலைவர், அமைச்சர்களை ஊழல் புகார்களில் காப்பாற்ற அடிக்கடி போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றத்தை மேற்கொள்வதோடு, தங்களுக்கு வேண்டிய போலீஸ் அதிகாரிகள் மூலம் குண்டர்களையும் தேர்தல் பணியில் முதல்வர் ஈடுபடுத்தியுள்ளார். மேலும் சிறந்த முன்னணி நடிகராகவும் தற்போது அம்ரீந்தர் சிங் ஜொலிக்கிறார் என கடும் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
இது பஞ்சாப் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு முதல்வர் அம்ரீந்தர் சிங் அளித்துள்ள பதிலடியில், ‘‘மக்களின் ஆதரவு காங்கிரசுக்கு பெருமளவில் உள்ளது. எங்களுக்கு எந்த குண்டர்களின் ஆதரவும் தேவையில்லை. பொய் பேசுவதில் அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மிகவும் வல்லவர்,’’ எனக் கூறியுள்ளார். இரு தலைவர்களின் வார்த்தை போர், தேர்தல் பிரசார களத்தில் சூட்டை கிளப்பி வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி