×

சாத்தனூர் தண்ணீர் காஞ்சிபுரத்திற்கு வரும்: திமுக வேட்பாளர் ஜி.செல்வம்

காஞ்சிபுரம் தொகுதியில் மக்களுக்கு நிறைய அடிப்படை தேவைகள் உள்ளது. காஞ்சிபுரத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள பட்டு பூங்கா திட்டம். மக்களுக்கு குடிநீர் பிரச்சனை ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. எனவே, சாத்தனூர் அணையில் இருந்து வேலூர் பகுதிக்கு செல்லும் தண்ணீரை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு திருப்பி விடும் திட்டத்தை கொண்டு வருவேன். இதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறேன். பொதுவாக காஞ்சிபுரம் டவுனுக்கு பொழுதுபோக்கு பூங்காவை ஏற்படுத்திக்கொடுக்கப்படும். திருப்போரூர்-செய்யூர் வழியாக தூண்டில் துறைமுகம் அமைத்து தருவதோடு, செங்கல்பட்டு முதல் அரக்கோணம் இடையே இரட்டை ரயில் வழித்தடம் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேலும், பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படும். தற்போது மக்கள், செங்கல்பட்டிற்கு போதிய ரயில் வசதி இல்லை என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.  காஞ்சிபுரத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் என்பது முக்கியமானதாக உள்ளது. இது நிறைவேற்றப்படும். குறிப்பாக, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சாலை வசதி, தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படும். இதேபோல், முதியோர் உதவித்தொகையை மீண்டும் பெற்றுத்தரப்படும்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sattanoor ,G. Selvam ,Kanchipuram ,DMK , Sattanoor, water, DMK candidate, G. Selvam
× RELATED திருக்கழுக்குன்றத்தில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு