×

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை காய் யான்யானை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சிந்து, 21-13, 17-21, 21-14 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம், இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் சிந்து அரையிறுதி வரை முன்னேறியிருக்கிறார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இப்போட்டியில் சாய்னா முதல் செட்டை விரைவில் இழந்தார். அடுத்த செட்டில் சற்று போராடினார். ஆனாலும் அவரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இந்த ஆட்டத்தில், 21-8, 21-13 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒகுஹரா- பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PV Sindhu , Singapore Open, PV Sindhu, Saina Nehwal ,Kidambi Srikanth ..
× RELATED ஆஸி. ஓபன் பேட்மின்டன்: காலிறுதியில் சிந்து