×

பழநியில் பங்குனி உத்திரம் முடிவடைந்தும் தொடரும் பக்தர்கள் வருகை

பழநி: பங்குனி உத்திரத் திருவிழா முடிவடைந்தும் பழநியில் பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது. எனவே பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. பழநி நகரில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இத்திருவிழா கடந்த மார்ச் 15ம் தேதி துவங்கியது. கடந்த 24ம் தேதி தேரோட்டம் நடந்தது. திருவிழா நேரத்தில் பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன. இதனால் அப்போது வரஇயலாத பக்தர்கள் தற்போது பழநி நகருக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் பழநி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிக கூட்டத்தின் காரணமாக வின்ச், ரோப்கார் மற்றும் மலைக்கோயிலில் பக்தர்களை கட்டுப்படுத்த தனியார் செக்யூரிட்டிகள் திணறி வருகின்றனர். மேலும், செக்யூரிட்டிகள் கட்டுப்படுத்தும்போது பக்தர்களுடன் மோதலும் ஏற்படுகிறது. எனவே, கோடை விடுமுறை முடிவடையும் வரை பழநி புதுதாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை அணியை சேர்ந்த காவலர்களைட பாதுகாப்பு பணிக்கு சுழற்சி முறையில் பயன்படுத்தி, பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தலாமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : funeral procession ,Bhagavathi , Palani, panguni Uthiram, devotees
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...