×

விஸ்வரூபமெடுத்த பொள்ளாச்சி விவகாரம் அதிமுக கோட்டையில் ஓட்டையா?

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்த விவகாரம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெற்றோர்களை குலைநடுங்க வைத்த இந்த சம்பவத்தில் சிக்கியவர்களின் வாக்குமூலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், பிடிபட்ட நபர்கள் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலத்தில் சிக்கியவர்கள் விஐபி வீட்டு பிள்ளைகள் என்பது தான்.  இந்த வழக்கில் சிக்கிய அதிமுகவை சேர்ந்த பார் நாகராஜன் என்பவரை உடனடியாக கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்கியது.  நாடாளுமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதால் கொங்கு மண்டலத்தில் ஆளுங்கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் வீடியோக்களில் பாதிக்கப்பட்ட பெண் கதறும் குரல் நாட்டையே உலுக்கிவிட்டது.

 தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த பாரபட்சமும் காட்டாமல் கடுமையான தண்டனைக்கு ஆளாக்க வேண்டும் என்ற குரல் ஒருங்கே சேர்ந்து ஓங்கி ஒலித்து வருகிறது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் பெயர் அடிபட்ட நிலையில்,  ‘புகார் தந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸ் பகிரங்கப்படுத்திய செயல், புகார் கொடுக்க  நினைக்கும் மற்ற பெண்களை மறைமுகமாக மிரட்டவே போலீஸ் இப்படிச் செய்துள்ளது’ என்ற  குற்றச்சாட்டும் எழுந்தது.
 தமிழக அரசின் தலையீடு இருப்பதால் தான் காவல் துறை இதுபோன்ற செயலை செய்துள்ளது என்ற ேகாஷத்தை எதிர்கட்சிகள் தற்போது கையிலெடுத்துள்ளது. இதனால் இந்த விவகாரம் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து காங்கிரஸ்- அதிமுக பெண் நிர்வாகிகளுக்கிடையோன கருத்து மோதல் என்ன என்பதை பார்ப்போம்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi , Visvarupametutta, Pollachi,AIADMK
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு