×

குன்றத்தூர் ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் மோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி: டி.ஆர்.பாலு வேண்டுகோள்

தாம்பரம்: பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய பகுதிகளில் பெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு நேற்று காலை பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் மற்றும் தோழமை கட்சிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரசாரத்தின்போது டி.ஆர்.பாலு பேசியதாவது:

தற்போது மத்தியிலும், தமிழகத்திலும் மிகவும் மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியால் கடந்த 5 வருடங்களாக மக்களாகிய நாம் மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். எனவே வருகிற 18ம் தேதி பொதுமக்கள் அனைவரும் மறந்து விடாமல் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து மோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே அவர்களை எல்லாம் நீங்கள் நேரில் சந்தித்து தேர்தலில் நீங்கள் வந்து கண்டிப்பாக ஓட்டு போட வைக்க வேண்டும். மோடி என்னும் மகாசுரனை அழித்து ஜனநாயகத்தை காத்திட 100 சதவீதம் வாக்களிக்க  வேண்டும். எனவே திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Regions ,TR Balu , Kudanthathur, Propaganda, Fraud, TRB, Request
× RELATED அவரை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை