×

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கைப்பையை பறித்த 3 சிறுவர்களை துரத்திய பெண் போலீஸ் படுகாயம்

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 9ம் தேதி இரவு சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இதையொட்டி ஆயுதப்படை பெண் போலீஸ் விஜயசாந்தி (27) உள்பட 500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். 3வது கேட் முன்பாக விஜயசாந்தி பணியில் இருந்தபோது 3 சிறுவர்கள் அவரது கைப்பையை பறித்துக்கொண்டு ஓடினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயசாந்தி அவர்களை விரட்டி சென்றபோது நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். உடனே மற்ற போலீசார் விரைந்து சென்று தப்பி ஓடிய சிறுவர்களில் ஒருவனை பிடித்தனர். படுகாயம் அடைந்த விஜயசாந்தியை மீட்டு கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட சிறுவனிடம் விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children ,cricket ground ,Chepauk , Chepauk, cricket, handbag, 3 children, female police, injuries
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...