×

கொஞ்சம் விட்டால் செருப்பும் விற்பார்! மம்தா ஆதங்கம்

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் இம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியபோது, ‘‘டார்ஜிலிங்கில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட பாஜ முயற்சி செய்கிறது. பல இடங்களில் தீ வைத்து பிரச்னையை உருவாக்குகிறது. இதன்மூலம், சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள பாஜ.வினர் சதி செய்கின்றனர். இங்குள்ள டார்ஜிலிங், காலிம்போங்க், குர்சியோங், மிரிக் பகுதிகளின் முன்னேற்றத்துக்கு பாஜ எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை.  கடந்த தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அலுவாலியா, டார்ஜிலிங் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை. வெற்றி பெற்றதோடு சரி, இந்த பக்கமே அவர் தலை காட்டவில்லை,’’ என்றார்.

புல்வாமா தாக்குதல் பற்றி குறிப்பிட்ட அவர், ‘‘பாஜ ஆட்சியில் நாட்டின் சுதந்திரம், அரசியல் அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காந்தி, தேதாஜி, விவேகானந்தர் ஆகியோரின் கொள்கைகளை இவர்கள் மறந்து விட்டனர். பிரதமர் தனது வளர்ச்சியில்தான் அக்கறை காட்டி வருகிறார். அவர் மிக உயர்ந்த தலைவர் ஆகிவிட்டார். தன்னை பற்றி சினிமா எடுக்கிறார். நமோ கடைகளை திறந்து, நமோ உடைகளை விற்கிறார். கொஞ்சம் விட்டால், தேர்தலுக்கு பிறகு அங்கு நமோ காலணிகள் கூட விற்கப்படக் கூடும்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mamta , Little, sandal, mamta, grace
× RELATED மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி,...