×

வாரணாசியில் மோடியை எதிர்த்து நீதிபதி கர்ணன் போட்டி

வாரணாசி: வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த முன்னாள் நீதிபதி கர்ணன் வேட்பு மனுதாக்கல்  செய்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன். இவர் சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து  ஓய்வு பெற்றவர். இவர் தனது பணிக்காலத்தில் நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் 20 பேர் மீது ஊழல் புகார் தெரிவித்து பிரதமருக்கு கடிதம்  எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை அனுபவித்தவர். சிறையில் இருந்து விடுதலையான கர்ணன், கடந்த ஆண்டு ஊழல் எதிர்ப்பு  ஆற்றல் கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறையில் உள்ள முறைகேடுகளை  வெளிப்படுத்துவதே தனது கட்சியின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார். வரும் 18ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் மத்திய சென்னை மக்களவை  தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்தும் கர்ணன்  தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karna ,Modi ,Varanasi , Varanasi Judge Karna, contest ,Modi
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை