×

வளர்ப்பு நாய் பிரச்னையில் பக்கத்து வீட்டுக்காரர் படுகொலை

புதுடெல்லி: வளர்ப்பு நாய் பிரச்னை குறித்த தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை நாய் உரிமையாளரின் மகன் கோடரியால் வெட்டி கொன்ற சம்பவம்  தெரிய வந்துள்ளது.   காஜிபூரில் பேப்பர் மார்கெட் பகுதியில் வசிப்பவர் மகாஜன். இவர் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் பீபாய் லால்  என்பவர் வசித்து வருகிறார். அவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மகாஜன், அவரது மனைவி  கிருஷ்ணாவதியை நோக்கி கத்தி கூச்சலிட்டார். அவரது நாயை இந்த தம்பதி அடித்து விட்டதாக ரகளை செய்தார். இதையடுத்த மகாஜனுக்கும்,  லாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  

கூலி வேலை செய்து வரும் லாலின் மகன் சுரேஷ், மகாஜனை கொன்று விடுவதாக மிரட்டினார்.  ஆத்திரத்தில் கோடரியை எடுத்து வந்து மகாஜனை தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் மகாஜன் சரிந்தார். அவரை அங்குள்ளவர்கள் லால் பகதூர்  சாஸ்திரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். முதலுதவிக்கு பிறகு குரு தேஜ்பகதூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை மகாஜன் இறந்தார். இதையடுத்து  கிருஷ்ணாவதி காவல் நிலையத்தில் லால் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப பதிந்து லால், அவரது மகனை சுரேஷ்  லாலை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : neighbor ,murderer , dog breeding,neighbor,assassinated
× RELATED நெல்லையில் கொலையானவரின் உடலை வாங்க மறுப்பு.: உறவினர்கள் போராட்டம்