×

பக்கத்து வீட்டு நபரை தாக்கி காயப்படுத்திய 3 பேர் கைது

புதுடெல்லி: நாடாளுமன்ற தெருவில் வசிக்கும் 40 வயது ஆசாமியை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மூன்று பேர் மரக்கட்டையால் தாக்கி  காயப்படுத்தினர். இதில், அவர் படுகாயமடைந்தார். நாடாளுமன்ற தெரு அருகே ரபி மார்க்கில் உள்ள விதால் பாய் படேல் ஹவுசில் புனித், சுஷில், அரவிந்த் மற்றும் ஹரிஷ் ராவத் ஆகியோர்  தங்கியுள்ளனர். இவர்களுக்குள் சின்ன சின்ன காரணங்களுக்காக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு சண்டையிட்டுள்ளனர். இதேபோன்று நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில், ராவத்தை மற்ற  மூவரும் மரக்கட்டையை கொண்டு பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த ராவத்தை அருகிலுள்ள ராம் மனோகர் லோகியா  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் போலீசாருக் கதகவல் கிடைத்து அங்கு சென்று விசாரித்தனர். அதன்பின் ராவத்தை தாக்கிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதோடு, ரத்தக்கறை  படிந்த மரக்கட்டையை பறிமுதல் செய்து மேற்ெகாண்டுவிசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : neighbors , Attack ,neighbor's, house ,injured
× RELATED தேனி சுற்றுப்புற பகுதிகளில் பரவும் கொரோனா: அச்சத்தில் கிராம மக்கள்