×

பி.சி.மோகன் ஹாட்ரிக் வெற்றி பெறுவார்: முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார் நம்பிக்கை

பெங்களூரு: பெங்களூரு மத்திய தொகுதி பாஜ வேட்பாளர் எம்பி பிசி மோகன், ஹாட்ரிக் வெற்றி பெறுவார்  என முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார்  கூறினார். மத்தியில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியும் பெங்களூரு மத்திய தொகுதியில் மறுபடியும் பிசி மோகன் ஹாட்ரிக் வெற்றி என்ற இலக்குடன்  பாஜவினர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதி எம்எல்ஏ சுரேஷ்குமார், எம்பி ராஜீவ்சந்திரசேகர், முன்னாள் துணை மேயர் ரங்கண்ணா உள்ளிட்டோர் பாஜ வேட்பாளர்  பிசி மோகனுக்கு ஆதரவாக பாதயாத்திரை நடத்தி வாக்குகள் சேகரித்தனர். பிரசாரத்தின் போது பிசி மோகன் கூறுகையில், :தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளேன். பொய்களை கூறி மக்களை ஏமாற்றவில்லை. செய்வதைதான்  கூறியுள்ளேன். அதையும் நிறைவேற்றியுள்ளேன். எனவே, மறுபடியும் என்னை  வெற்றி பெறச்செய்யவேண்டும் என்று வேண்டுகிறேன், என்றார்.  

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் பாஜ செய்தி தொடர்பாளருமான சுரேஷ்குமார் பேசியதாவது:பெங்களூரு ராஜாஜிநகர் பாஜவின் இரும்பு கோட்டை. கவுன்சிலர் தேர்தல் மட்டும் இன்றி எந்த தேர்தல் வந்தாலும் மக்களின் வாக்குகள் பாஜவுக்கு  மட்டுமே கிடைக்கும். சட்ட பேரவை தேர்தலின் போது அதிக வாக்குகள் வித்தியாசத்தி–்ல் பாஜவுக்கு வெற்றி கிடைத்தது. அது போல் மக்களவை  தேர்தலின் போது அதிக வாக்குகள் பாஜவுக்கே கிடைக்கும். பாஜ வேட்பாளர் பிசி மோகனுக்கு இந்த முறை கடந்த முறையை விட அதிக  எண்ணிக்கையில் வாக்குகள் கிடைக்கவேண்டும். பாஜ தொண்டர்கள், இதை மனதில் வைத்து செயல்படவேண்டும். மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி  தலைமையில் பாஜ ஆட்சி பெங்களூரு மத்திய தொகுதியில் பிசி மோகன் எம்பி என்ற இலக்குடன் தொண்டர்கள் செயல்படவேண்டும்,என்றார்.  பெங்களூரு ராஜாஜிநகர், பிரகாஷ்நகர், காமாட்சி பாளையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் நடந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PCMohan ,Suresh Kumar ,wins , PCMohan, hat-trick, former minister, Suresh Kumar believes
× RELATED இன்றைய நிகழ்ச்சி சம்மர் ஸ்போர்ட்ஸ்...