சென்னை: 126 ரஃபேல் விமானங்களுக்கு பதிலாக மோடி அரசு 36 விமானங்கள் வாங்கவே முடிவு செய்தது என சீதாராம் யெச்சூரி கூறினார். மேலும் பிரதமர் மோடி ஒப்பந்தத்தின்படி 2021-ல் தான் ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு வரும் எனவும் கூறினார். காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி இருந்தால் எப்போதோ ரஃபேல் விமானம் இந்தியா வந்திருக்கும் எனவும் தெரிவித்தார். ரஃபேல் போர் விமான வழக்கில் மத்திய அரசு பல தகவல்களை மறைத்து உள்ளது எனவும், இந்தியாவின் பாதுகாப்பு விசயத்திலேயே மத்திய அரசு சமரசம் செய்து உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி