×

பாமகவில் இருந்து விலகிய மாநில துணைத் தலைவர் மணிகண்டன்..: மேலும் பலர் விலகுவார்கள் என அறிவிப்பு

சென்னை: பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் அறிவித்துள்ளார். இதனால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டன், திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று தான் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் சொன்னதன் அடிப்படையில் நாங்கள் ஆவலோடு பணியாற்றினோம். இன்று முதல் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கொள்கிறேன். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது என்று சொன்னார்கள். ஆனால், இப்போது அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டணிக்காக, மிகப்பெரிய பேரம் நடந்தது என்று பின்னர் தான் எங்களுக்கு தெரியும். இது பேர கூட்டணி என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் கூறுகையில், கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பாமக வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெற பாடுபடாமல் அவர் மகன் அன்புமணி மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்று ராமதாஸ் நினைக்கிறார். அன்புமணிக்கு தொண்டனைக் மதிக்க தெரியாது. வியாபார ரீதியாக சிந்திக்கின்ற கட்சியில் இன்னும் செயல்பட முடியாது. தமிழகம் முழுவதும் பல நிர்வாகிகள் இன்னும் பாமகவிலிருந்து விலகுவார்கள் என்று கூறியுள்ளார். பாமகவில் இருந்து  மாநில துணைத்தலைவர் ரஞ்சித் ஏற்கனவே விலகியுள்ள நிலையில் துணைத்தலைவர் மணிகண்டன் இன்று விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manikandan ,many ,PMG , PMK, Vice President, Manikandan, Anbumani,Ramadoss
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...