×

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை போன்று சித்ரா பவுர்ணமி விழாவும் சிறப்பாக நடைபெறும். சித்ரா பவுர்ணமியின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அதன்படி, வரும் 19ம் தேதி சித்ரா பவுர்ணமி நாளன்று பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்ரா பவுர்ணமிக்கு சில நாட்களே உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, அண்ணாமலையார் கோயில் பிரகாரத்தில் பழுதடைந்துள்ள மின்விசிறிகள், மூன்றாம் பிரகாரத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதேபோல், 2ம் பிரகாரத்தில் பக்தர்கள் வரிசையில் செல்வதற்கான பந்தல், கோயில் வளாகத்தில் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மின்விசிறிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக கோயிலில் பன்படுத்தப்பட்டு வந்த 32 மின்விசிறிகள் பழுது பார்க்கப்பட்டு, அண்ணாமலையார் சன்னதி, அம்மன் சன்னதியில் பொருத்தப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Annamalaiyar ,Chitra Poornima , Chitra Poornima, Annamalaiyar Temple
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...