×

ஏப்.12-ம் தேதி பைசாகி திருவிழா தொடக்கம்: 2200 சீக்கியர்களுக்கு விசாக்கள் வழங்கியது பாகிஸ்தான் அரசு

லாகூர்: பாகிஸ்தானில் நடைபெற உள்ள பைசாகி திருவிழாவில் கலந்துகொள்ள, இந்தியாவில் இருந்து செல்லும் 2200 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசாக்களை வழங்கியுள்ளது. சூரிய ஆண்டின் தொடக்கத்தையும்,  அறுவடைப் பருவத்தையும் கொண்டாடும் வகையில், 17-ம் நூற்றாண்டிலிருந்து சீக்கியர்களால் பைசாகி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹசன் அப்தல் நகர் குருத்வாராவில்  
பைசாகி திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.

பைசாகி திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தானிற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் மட்டுமன்றி பல்வேறு மதத்தினரும் யாத்திரையாக செல்வது வழக்கம். இந்த ஆண்டு இந்த  பைசாகி திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலங்களான பஞ்ச சாகிப், நன்கனா சாகிப், மற்றும்  கர்தார்பூர் உள்ளிட்ட தலங்களுக்கு சென்று வழிபாடுகள், பூஜைகள் ஆகியவற்றில் சீக்கிய யாத்ரீகர்கள் கலந்துக் கொள்வர்.  

இந்நிலையில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் நடைபெறும் விழாவிற்கு செல்லவுள்ள 2200 சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசாக்களை வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமானதாகும். இது குறித்து  பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மங்களகரமான பைசாகி திருவிழாவில் கலந்துக் கொள்ள வரும் அனைத்து சீக்கிய சகோதர , சகோதரிகளையும் பாகிஸ்தான் சார்பாக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இந்த  புனிதப்பயணம் யாத்ரீகர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைய வாழ்த்துகிறோம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,government ,Sikhs , Baisakhi festival, Sikhs, visas, Pakistan government
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி