×

நொந்த குமாரும்... 3 தொகுதிகளும்...

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்தது. இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை.இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை  நடக்கிறது. இதில் டெல்லியில் உள்ள புதுடெல்லி, சாந்தினி சவுக், வடமேற்கு டெல்லி ஆகிய மூன்று தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது. ஆம் ஆத்மி 2 தொகுதிதான் என்று நிபந்தனை விதிக்கிறது. இந்த இழுபறி போதாதென்று  இப்போது அரியானாவில் உள்ள குருகிராம், பரீதாபாத், கர்னால் தொகுதிகளையும் எங்களுக்கு ஒதுக்கினால் டெல்லியில் 3 தொகுதி தர நாங்கள் தயார் என்று ஆம் ஆத்மி கூறுகிறது.

ஏற்கனவே பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளில் பங்கீடு கேட்டது ஆம் ஆத்மி. ஆனால் பஞ்சாப் காங். முதல்வர் அம்ரீந்தர் ஒரேயடியாக நோ சொல்லிவிட்டார். இப்போது அரியானாவிலும் தொகுதிப்பங்கீடுக்கு ஆம் ஆத்மி  ஆசைப்படுகிறது. அங்கு ஜனநாயக ஜனதா கட்சியுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டதால்,  ஆம் ஆத்மி கூட்டணியில் இணையவும், 3 தொகுதியை ஒதுக்கவும் வலியுறுத்துவதால் காங்கிரஸ் விழிபிதுங்கி போய்  உள்ளது. இதுபற்றி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘கடந்த ஏழு மாதமாக காங்கிரசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி சோர்ந்து போய்விட்டேன்’’ என்று நொந்துபோய் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nandha Kumara , Lame baby,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி