மேற்கு வங்க மாநிலம், ராய்கஞ்ச் பகுதியில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் மாநில முதல்வரும் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது: கலவரம் மற்றும் வெகுஜன படுகொலை மூலம் பிரதமர் மோடி அரசியல் நடத்தி வருகிறார். பொதுவுடைமை எதிர்ப்பு கொள்கையான பாசிசத்தின் அரசனாக மோடி விளங்கி வருகிறார்.
அடால்ப் ஹிட்லர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை பார்த்து தற்கொலை செய்து கொண்டிருப்பார். பாஜவுக்கு எதிராக வலிமையான ேபாட்டியை காங்கிரஸ் தருவதில் தோல்வி அடைந்துள்ளது. பாஜ கட்சி வலுவாக மிக வலுவானதாக மாறிவருகிறது. மத்தியில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. மத்தியில் ஆட்சி அமைக்க ராகுல் காந்தி தலைமையிலான கட்சி பிறரது ஆதரவை கோரி வருகிறது. மோடி அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டால் நாங்கள் அனைவரும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம். மதவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒருபோதும் சமாதானம் செய்து கொள்ளமாட்டோம் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி