×

தேர்தல் சின்னமாக அறிவிக்கப்பட்டதால் வடைச்சட்டிகள் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி: பறக்கும் படை அதிரடி

மேலூர்: டெல்லியில் இருந்து மதுரைக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வடைச்சட்டிகளை மேலூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.டெல்லியில் இருந்து மதுரை கோச்சடைக்கு கன்டெய்னர் லாரி ஒன்றில் வடைச்சட்டிகள் ஏற்றி வரப்பட்டன. மேலூர் நான்குவழிச்சாலை சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியான தாசில்தார் பழனிகுமார் அந்த லாரியை மடக்கி சோதனையிட்டார். அதில், உரிய ஆவணங்
கள் இல்லாமல் ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள 110 வடைச்சட்டிகள் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்து மேலூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். வடைச்சட்டி தேர்தல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததால் வடைச்சட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vodafone , Vodafone confiscation,declared , election symbol: Flying Force Action, Flying Force Action
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...